fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் பதவி ஏற்றார்

ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் பதவி ஏற்றார்

ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் பதவி ஏற்றார்.ஈரோடு மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 60 உறுப்பினர்கள் கடந்த 2 ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் மாமன்ற உறுப்பினர்களில் 54 உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் ஆணையர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் இருந்தன.

50வது-வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நாகரத்தினம் மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்தார் .

தொடர்ந்து மேயராக வெற்றி பெற்றவருக்கு செங்கோல் வழங்கி மேயர் பதவிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img