fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் தின விழா

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் தின விழா

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டு றவு வங்கியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மகளிர் வளர்ச்சிப்பிரிவு மேலாளர் ஆர்.தமிழ்ச் செல்வன் வரவேற்றார்.

வங்கித்தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி பேசும் போது, நடப்பாண்டில் மகளிருக்காக ரூ.20 கோடி அளவில் கடன்கள் வழங் கப்பட்டுள்ளன என்றார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.10 இலட்சம் கடனுதவியை அவர் வழங்கினார்.

வங்கியில் மகளிர்களுக்காக பல்வேறு வகையான கடன் திட்டங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் கடந்த 2020-2021-ம் ஆண்டில் 2518 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.67.00 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வங்கியின் மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்த மிழ்ச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். வங்கி துணைத்தலைவர் பி.கே சிவமூர்த்தி, வங்கி இயக்குநர் எஸ்.பழனிசாமி, பொதுமேலாளர் ஆர்.ரவிச் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img