fbpx
Homeபிற செய்திகள்கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பேரூராட்சி தலைவர் அம்சவேணி

கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பேரூராட்சி தலைவர் அம்சவேணி

காவேரிப்பட்டினம் பேரூராட்சி 1-வது வார்டு அப்பா சாமி நாயுடு தெருவில் பல வருடங்களாக கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி இருந் தது. பொதுமக்கள் புகா ரையடுத்து காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக தூய்மைப் பணியாளர்களை வர வழைத்து கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தார்.

பின்பு பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தின் மூலம் கொசு மருந்தை வீடு வீடாகச் சென்று தெ ளிக்கச்செய்தார். அப் போது பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ராஜன் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கீதா ஞானசேகரன், தமிழ்ச் செல்வி சோபன் பாபு, அமுதா சக்தி வேல், கோகுல், அமுதா பழனி , தினேஷ், இளையராஜா மற்றும் ஏராளமானவர்கள் உட னிருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img