fbpx
Homeபிற செய்திகள்காவேரிபட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி, துணைத்தலைவர் மாலினி பதவியேற்பு

காவேரிபட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி, துணைத்தலைவர் மாலினி பதவியேற்பு

காவேரிப்பட்டணம் பேரூராட்சி தேர்தலில் 15 வார்டுகளில் 10 வார்டுகள் திமுகவும் 5 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது.

கடந்த 2ஆம் தேதி வெற்றிபெற்ற 15-வார்டு உறுப்பினர்களுக்கும் பதவியேற்பு விழா நடந்தது. பின்னர் 4ம் தேதி நேற்று தலைவர் துணைத்தலைவர் மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் நடந்தது.

இதில் 2 வது வார்டில் வெற்றி பெற்ற அம்சவேணி (திமுக) 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் மதியம் 3 மணி அளவில் துணை தலைவர்தேர்தல் நடந்தது.

இதில் திமுகவைச் சேர்ந்த மாலினி மாதையன் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் பின்னர் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள், மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் ஜே.கே.எஸ் பாபு, திமுக பிரமுகர் கே .எஸ்.சீனிவாசன்,பொதுக்குழு எஸ்.ஆர். ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், வர்த்தக அணி அமைப்பாளர் மணி, விஜயன் ஆகியோரிடம் ஆசி பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img