fbpx
Homeபிற செய்திகள்காஸ், சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஸ், சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு – காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கியாஸ், பெட்ரோல் ,டீசல், சுங்க கட்டணம் விலை உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு சூளை பஸ்நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அப்போது கியாஸ் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரச் செயலாளர் சுந்தரராஜ், சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்டேட் காலனி, சூரம்பட்டி நால்ரோடு உட்பட பல்வேறு இடங்களிலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு மற்றும் மருந்து மாத் திரைகளின் விலைகளை தாறு மாறாக ஏற்றம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு மகன் ஈவெரா முன்னிலையில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந் திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெண்கள் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

படிக்க வேண்டும்

spot_img