கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப்பணிகளில் தற்போது மிதிவண்டி பாதை, பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடம், கற்றல் மையம், அனுபவ மையம் மற்றும் Ghat plaza, நீர் திரையில் ஒலி, ஒளி காட்சி அமையவுள்ள இடம் உள்ளிட்ட பணிகளை சுற்றுலாத்தலங்களை பற்றிய தகவல்களை 3D வடிவில் அமைக்கப்படுவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டபோது எடுத்தபடம்.
உடன் மாநகரப் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் உமாதேவி, உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.