fbpx
Homeபிற செய்திகள்கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் ,மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கத்தினர் இன்றும், நாளையும் என இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

எல்.ஐ.சி தனியார் மயமாக்கப் படுவது ஊழியர்களுக்கு மட் டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு என போராட்டத்தில் ஈடுபட்ட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img