fbpx
Homeபிற செய்திகள்சார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த 4 பயணிகளிடம் ரூ.2.59 கோடி தங்ககட்டிகள் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த 4 பயணிகளிடம் ரூ.2.59 கோடி தங்ககட்டிகள் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து விமானத் தில் கோவை வந்த பெண் உட்பட 4 பயணிகளிடம் ரூ.2.59 கோடி மதிப் பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது.

அப்பொழுது சுங்க அதிகாரிகள் சோதனை கொண்டி ருந்தனர். இதை தொடர்ந்து சந்தே கத்திற்கிடமாக கோவையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் நடந்து கொண்டனர்.

அவர்கள் 4 பேரையும் ஆய்வு செய்ததில் தொப்பி மற்றும் ஜீன்ஸ் பேண்ட் இடையில் தங்கக்கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் கோவையைச் சேர்ந்த உமா (34), கடலூரைச் சேர்ந்த பாரதி (23), தஞ்சையைச் சேர்ந்த திருமூர்த்தி (26) திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் கணபதி (29) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை கைது செய்த சுங்கத்துறையினர், சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ரூ.2.59 கோடி மதிப் புள்ள 4.9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img