fbpx
Homeபிற செய்திகள்சிறந்த தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு மாநில விருது

சிறந்த தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு மாநில விருது

கோவை புலியகுளம் புனித அந்தோணி யார் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் மாநில அளவில் சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற் கான விருதை தமிழ்நாடு தேசிய மாணவர்படையின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திர சேகர் வழங்கி மாணவர்களை கவுரவித்தார்.

தேசிய மாணவர்படை மாணவர் களான கோமதி நாயகம், ஆகாஷ்,சிண்டோ, பிர சாந்த், கார்த்திகேயன், ஹரிஸ், சபரீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டார்கள்.

ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் சிறப்பாக செயல்படும் தேசிய மாணவர்படை மாணவர்களுக்கு “ சிறந்த தேசிய மாணவர்படை மாணவர்கள் “ என்ற விருது வழங்குவது வழக்கம் .

மாணவர்களின் நன்னடத்தை, ஆற்றிய சமூகசேவை, பள்ளியில் பெற்ற மதிப் பெண்கள்,பொது அறிவு, அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், ஆளுமை தன்மை போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

2021-2022ம் கல்வி யாண்டில் சிறந்த தேசிய மாணவர் படைகளாக அந்தோணியார் உயர் நிலைப் பள்ளி மாணவர் கள் தேர்வு பெற்று கோவை மாவட்ட தேசிய மாணவர்படை அமைப்புக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்தார்கள்.

விருது பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் அருட்பணி பால்ராஜ், தலைமையாசிரியை அமலோற்பவ மேரி, தேசிய மாணவர்படை அலுவலர் ஞா.ஆல்பர்ட் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img