fbpx
Homeபிற செய்திகள்சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சாதனை படைத்த 11 வயது கோவை சிறுமி- 3 உலக...

சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சாதனை படைத்த 11 வயது கோவை சிறுமி- 3 உலக அமைப்புகள் சான்றிதழ்

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள, விளையாட்டு மைதானத்தில், முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 11 வயது மாணவி, மூன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த பாபு, கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகள் தீர்த்தாபாபு (வயது 11). இவருக்கு சிறு வயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் அதீத ஈடுபாடு. இதன் காரணமாக, சின்னவேடம்பட்டி பகுதியில், முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர், சிலம்பப் பயிற்சிகளுக்காக சேர்ந்தார்.

சிலம்பப் பயிற்சிகளை முறையாக கற்று கொண்ட பின்னர், தான் கற்ற கலைகளை, சாதனையாக மாற்றும் முயற்சியில் கடந்த ஒரு மாதமாக, ஈடுபட்டுள்ளார்.

கடந்த 16 நாட்களாக பல்வேறு கட்ட பயிற்சிகளை பயிற்சியாளர்கள் அளித்ததன் அடிப்படையில், சின்னவேடம்பட்டி பகுதியில், ஒரு கையில் சிலம்பம் சுற்றியபடி, 17 கி.மீ. தூரத்தை பின்னால் நடந்து கொண்டே 3 மணி நேரத்தில் சுற்றி வர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், 2 மணி நேரம் 59 நிமிடம் 59 விநாடிகளில் செய்து முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதுவரை யாரும் செய்யாத இது போன்ற முயற்சியை மேற்கொண்டு, வெற்றியும் கண்டதில்லை. சிலம்ப துறையில் தீர்த்தா பாபு, புதிய தடம் பதித்துள்ளார்.

இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக் கார்ட்ஸ், அமேரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், யூரேப்பியன் புக் ஆப் வேல்ர்ட் ரெக்கார்ட்ஸ் என மூன்று சாதனை அமைப்புகள், இந்த சாதனையை அங்கீகரித்து, தீர்த்தா பாபுவுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கேடயங்கள், ஆளுயர கோப்பையை மைதானத்தில் வழங்கி பெருமைப்படுத்தின.

நிகழ்ச்சியில், இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ், இந் தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர், சதாம் உசேன், நடுவர்கள் பாலாஜி என பலரும் பங்கேற்றனர்.

உலக சாதனையை, வழி நடத்தி சாதனையை அங்கீகரித்து உள்ளனர். இந்த சாதனையை படைத்த மாணவிக்கு சக மாணவ, மாணவிகள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img