ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியின் முதல் மன்றக் கூட்டம் இன்று (31ம் தேதி) சேர்மன் ஜெயமுருகன் தலைமையில் , செயல் அலுவலர் சந்திரகலா முன் னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ தங்கபாண்டியன் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், செட்டி யார்பட்டி பேரூராட்சிக்கு புதியதாக பேரூராட்சி அலுவலக கட்டிடம் , பேரூராட்சிப்பகுதிகளில் தினந்தோறும் குடிநீர் வழங்க கிணறுகள், பைப்லன் அமைத்தல் போன்ற பணிகள் நடை பெறவுள்ளதாக எம்எல்ஏ தங்கபாண்டியன் தெரிவித்தார்.
துணை சேர்மன் விநாயகமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.