fbpx
Homeபிற செய்திகள்செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கு புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கிய கோவை மேயர்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கு புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கிய கோவை மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அஞ்சல்துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 10 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு அஞ்சல் கணக்கு துவங்கப்பட்டு சேமிப்பு திட்டத்திற்கான கணக்கு புத்தகத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன், 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன், மாநகர கல்வி அலுவலர் பாண்டிய ராஜ சேகர், பள்ளி தலைமையாசிரியை மைதிலி, பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img