fbpx
Homeபிற செய்திகள்சேத்தூர் பேரூராட்சியில் பகுதி சபை கூட்டம்: தங்கபாண்டியன் எம்எல்ஏ பங்கேற்றார்

சேத்தூர் பேரூராட்சியில் பகுதி சபை கூட்டம்: தங்கபாண்டியன் எம்எல்ஏ பங்கேற்றார்

விருதுநகர் மாவட்டம், சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் நவம்பர் 1, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சேத்தூர் பேரூராட்சிப்பகுதிகளில் ஏரியா சபை கூட்டம் அந்தந்த வார்டு உறுப்பினர்களை தலைவராகக் கொண்டு நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பொதுமக்க ளுக்கு பேரூராட்சியால் செயல்படுத்தப்படும் திட் டங்கள், அத்திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகள் விபரப்பட்டியல், அந்தந்த பகுதியில் வரிமற்றும் வரியற்ற இனங்கள் நிலுவை விபரம் வாசிக்கப்பட்டது.

அந்தந்த வார்டு செயலர்களான இளநிலை உதவியாளர்கள் அ.அசோக் குமார், ப.தனலட்சுமி, பொ.செல்வக்குமரன் வரித் தண்டலர் க.பலராமன் ஆகியோர் உடனிருந்து பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை பதிவு செய்தனர்.

மேற்படி நிகழ்வுகளில் பேரூராட்சி மன்ற தலைவர் இ.பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் க.வெங் கடகோபு, துணைத்தலைவர் மா.காளீஸ்வரி மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img