fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாபுதிய மிட் கார்ப்பரேட் கிளை - ஏடிஎம் முதன்மை பொதுமேலாளர்...

திருப்பூரில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாபுதிய மிட் கார்ப்பரேட் கிளை – ஏடிஎம் முதன்மை பொதுமேலாளர் அபிஜித் பசாக் திறந்து வைத்தார்

திருப்பூரில் தாராபுரம் ரோடு எவரெடி காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மிட் கார்ப்பரேட் கிளை மற்றும் பிராந்திய அலுவலகத்தில் ஏடிஎம் திறப்பு விழா இன்று (22ம் தேதி) காலை நடைபெற்றது.

இதனை வங்கியின் முதன்மை பொது மேலாளர் அபிஜித் பசாக் (மிட் கார்ப்ப ரேட் வெர்டிகல், மும்பை) திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: இந்த வங்கிக் கிளையானது கார்ப்பரேட் வாடிக் கையாளர்கள் மற்றும் ஏற்றுமதி வாடிக் கையாளர்களின் தேவை களைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் விரைந்த சேவைகளை தரும் வகை யிலும் தொடங்கப்பட்டுள்ளது.

அனைவரும் இந்த புதிய கிளையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் திருப்பூர் மிட் கார்ப்பரேட் கிளை உடனுக்குடன் செய்து தரும். இவ் வாறு முதன்மை பொதுமேலாளர் அபிஜித் பசாக் பேசினார். நிகழ்ச்சியை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா திருப்பூர் பிராந்திய மேலாளர் பி.எம்.செந்தில்குமார் தலை மை தாங்கி நடத்தினார்.

மிட் கார்ப்பரேட் கிளை மேலாளர் எம்.சோமசுந்தரம் மற்றும் வங்கி ஊழியர்கள், கார்ப்பரேட் வாடிக்கையா ளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கிளையில் ரூ.50 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img