திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பாக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஓவியர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஓவியர்கள் என். ரவிச்சந்திரன், சாதிக் பாஷா, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்-
செயலாளர் செந்தமிழ் ராஜா வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஓவியர்கள் நாகராஜ், தர்மராஜ் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் மார்ச் இறுதிக்குள் அனைத்து ஓவியர்களும் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்,
பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெறும் ஓவிய கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு அனைவரும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் பொருளாளர் ஓவியர் சி.ராம சுந்தர் நன்றி கூறினார்.