fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி துறைமுகத்துக்கு ‘தேசிய பாதுகாப்பு விருது’

தூத்துக்குடி துறைமுகத்துக்கு ‘தேசிய பாதுகாப்பு விருது’

மத்திய அரசின் கீழ் செயல் பட்டு வரும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், தொழிற்சாலை ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் டைரக்டரேட் ஜெனரல் (DGFASLI),, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்துக்கு தேசிய பாதுகாப்பு விருதை வழங்கி உள்ளது.

இவ்விருது வழங்கும் விழா, புதுடெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த விருதை வழங்கினார்.

இதனை துறைமுகம் சார்பாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய இயக்குநர் டி.கே.ராமச்சந் திரன் பெற்றுக் கொண்டார். தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் டேலி விழாவுக்கு முன்னிலை வகித்தார்.

கடந்த 1965-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுக ளின் அடிப்படையில் தொழிற்சாலை களுக்கு தேசிய பாதுகாப்பு விருதுகளை(NSA) மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த விருது 1971-ம் ஆண்டு முதல் இந்திய துறைமுகங்களுக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே சரியான பாதுகாப்பு செயல் திறனுக்கான அங்கீகாரமாகவும், விபத்தினை தடுப்பதற்கும் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், நிர்வாகத்தையும், தொழிலாளர்களையும் ஊக்குவிப்ப தற்காகவும் இத்தகைய விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமானது துறைமுக செயல்பாடுகளின் போது சரக்கு கையாளும் உபகரணங்களும்/ இயந்திரங்களும் சரியான முறையில் பொருத்தப்பட்டிருப்பதையும் அதன் பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது.

துறைமுக சரக்கு கையாளும் செயல்பாடுகளில் ஈடுபடும் துறைமுக ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளதால் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமானது 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் உயிர் இழப்பு இல்லாமல் தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதினை பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் துறைமுக ஆணையத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனி வருங்காலங்களில் ‘விபத்தில்லா துறைமுகமாக’ இருப்பதோடு மட்டுமல்லாமல் ‘பாதுகாப்பான துறைமுகமாக’ நமது துறைமுகம் திகழ்வதற்கு அனைவரும் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img