fbpx
Homeபிற செய்திகள்நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்: கோவையில் எஸ்பி வேலுமணி பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்: கோவையில் எஸ்பி வேலுமணி பேட்டி

கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற் றது.

அதிமுகவின் 51வது ஆண்டுவிழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது.

இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது, மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது.
இந்த ஆட்சி மாற வேண்டும்.

இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.

இங்கே எப்போதும் இரு மொழிகொள்கைதான். தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img