fbpx
Homeபிற செய்திகள்நேரு யுவகேந்திரா இளையோர் திருவிழா

நேரு யுவகேந்திரா இளையோர் திருவிழா

திண்டுக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா ஆண்டு தோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் சரண் வி.கோபால் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலை வகித்தனர்.

இளைஞர்கள், மாணவ, மாணவிகளுக்கான இளையோர் விழாவில் கவிதை போட்டி, ஓவிய போட்டி, கைப்பேசி புகைப்பட போட்டி, பேச்சுப்போட்டி, இளையோர் சொற்பொழிவு போட்டி, கிராமிய நடன போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, திண்டுக்கல் மேயர் இளமதி கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசும் வழங்கினார்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img