fbpx
Homeபிற செய்திகள்பள்ளபாளையத்தில் வார்டு சபை கூட்டம்

பள்ளபாளையத்தில் வார்டு சபை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க நவம்பர் 1ம் தேதி வார்டு மகா சபை கூட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி சார்பாக நடைபெற்றது. இக்கூட்டம் தலைவர் பி.கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சுகாதாரமான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துதல், மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் கபிலன், இளநிலை உதவியாளர் கிருஷ்ணன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img