fbpx
Homeபிற செய்திகள்பழுதான குடிநீர் குழாயை ஆய்வு செய்த கோவை மேயர்

பழுதான குடிநீர் குழாயை ஆய்வு செய்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட சத்தி பிரதான சாலை, சிவானந்தபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடிநீர் குழாயின் பழுதை உடனடியாக சரிசெய்து இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, கதிர்வேல், பழனிசாமி (எ) சிரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img