fbpx
Homeபிற செய்திகள்மண் வளம் காக்க லண்டன் முதல் தமிழகம் வரை 30 ஆயிரம் கி.மீ. தூரம் சத்குரு...

மண் வளம் காக்க லண்டன் முதல் தமிழகம் வரை 30 ஆயிரம் கி.மீ. தூரம் சத்குரு பைக் பயணம்

உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஈஷா நிறுவனர் சத்குரு தனி ஆளாக 30 ஆயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளார்.

மார்ச் 21ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை துவங்கும் அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். அதிநவீன சொகுசு பைக்கில், இந்த பயணம் மேற்கொள்கிறார்.

இதையொட்டி, கோவையில் இருந்து நேற்று முன்தினம் அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டார். கரீபியன் தீவுகளுக்கு பயணிக்கும் அவர் 9 முதல் 11 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார்.

இது குறித்து சத்குரு கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகளும், ஐ.நா. அமைப்புகளும் மண் வளம் இழப்பதால் ஏற்பட போகும் பேராபத்து குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக அதிகரித்துவிடும். ஆனால் உணவு உற்பத்தி தற்போது இருப்பதை விட 40 சதவீதம் குறைந்துவிடும்.
இதனால் 192 நாடுகளில் மண் வள பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்க நாங்கள் வலியுறுத்த உள்ளோம்.

இதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். 730 அரசியல் கட்சிகளுக்கு தங்களின் தேர்தல் அறிக்கைகளில் மண் வள பாதுகாப்பை முக்கிய அம்சமாக சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறோம்.

நாங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அங்குள்ள விவசாய முறைகள் மற்றும் மண்ணின் தன்மையை அடிப்படையாக கொண்டு மண் வள பாதுகாப்பு கொள்கைகளை தயாரித்து இருக்கிறோம்.

இந்த முயற்சியில் ஐ.நா.வின் அங்கமாக இருக்கும் யுஎன்சிசிடி, யுஎன்இபி, டபிள்யுஎப்பி ஆகிய 3 அமைப்புகள் ‘மண் காப்போம்‘ இயக்கத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.

அத்துடன், உலக அளவில் பிரபலமான இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுக்க உள்ளனர். இவ்வாறு சத்குரு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img