மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி யில் ஈரோடு அணி 2ம் இடம் பிடித்தது. கோவை மாவட்டம் அன்னூரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந் தது. 11,13,15,17 வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சே லம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின.
இதில், 2:1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணி முதலிடத்தையும், ஈரோடு அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
இரண்டாம் இடத்தை பிடித்த ஹரி, ரோகித், மிதுன், ஜீவா, சாந்தனு, ஜூடோ சாரன், தர ணீஷ் ஆகியோரை அணியின் பயிற்சியாளர் ராஜகோ பால், கவுதம், மனோஜ் பாராட்டி வாழ்த்தினர்.