fbpx
Homeபிற செய்திகள்ரத்தக்குழாய் அடைப்பால் போராடிய முதியவருக்கு மறுவாழ்வு தந்த திருச்சி அப்போலோ மருத்துவக்குழு

ரத்தக்குழாய் அடைப்பால் போராடிய முதியவருக்கு மறுவாழ்வு தந்த திருச்சி அப்போலோ மருத்துவக்குழு

ரத்தக்குழாய் அடைப் பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு, திருச்சி அப்போலோ மருத்துவக்குழு மறுவாழ்வு தந்தது.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் 62 வயது முதியவர் அடிவயிற்றில் கடுமையான வலியுடன் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் செரிமான மண்டலத்தில் ரத்தம் செலுத்தும் தமணி (SMA) ரத்தம் உறையும் சிக்கலான நிலை மற்றும் குடல் ஒவ்வாமை என குறிக்கப்படும் குடலுக்கு ரத்தம் செல்வதில் அடைப்பு ஏற்பட்டு குடல் தசைகள் சிதையும் ஆபத்தான கட்டத்தில் இருப்பது தெரியவந்தது.

அத்துடன் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு இணை நோய்கள் இருந்துள்ளன. அதற்கான மருந்துகளை அவர் தொடர்ந்து எடுக்காமல் இருந்துள்ளார்.

அதன் விளைவாக எத்தகைய தொற்றுக்கும் எளிதாக ஆட்படும் வாய்ப்புள்ள மிக பலவீனமான நோயாளியாக இருந்தார். எஸ்எம்ஏ த்ராம்பஸ் நிலையில், ஒரு நோயாளிக்கு மரணத்திற்கான வாய்ப்பு 60 – 70 சதவீதமாக கணிக்கப்படுகிறது. இந்நிலையில், உடலில் கடும் பிரச்சினைகளைக் கொண்டுள்ள இந்த நோயாளிக்கு மரணத்திற்கான வாய்ப்பு 90 சதவீ தமாக இருந்தது.

சவாலான நிலையில், Jejunostomy & laparotomy மிக முக்கியமான இரண்டு சிகிச்சைகளை லேப் ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் முகமது மன்சூர், வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் ஆகியோர் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

நோயாளி ஐசியூவில் வைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். அடுத்த 48 மணி நேரத்தில் laporotomy சிகிச்சை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. ஆழமான பவுத்திர மூலத்தைச் சரி செய்வதற்காக முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சுமார் 25 நாட்கள் தீவிர மருத்துவப் போராட் டத்திற்குப் பின்பு, தானே எழுந்து நிற்கும் அள வுக்கு உடல் நிலை தேறினார் செல்வராஜ். இது திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்து வர்கள் செய்துள்ள பெரிய சாதனையாகும்.

இதயநோய் மருத்துவர் சியாம் சுந்தர், குடலியல் நோய் மருத்துவர் முரளி ரங்கன், நுரையீரல் தமிழ ரசன், தீவிர சிகிச்சை மருத்துவர்கள் பரணி மற்றும் விக்னேஷ், மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திக், அழகப்பன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை முடித்து நோயாளி வீடு திரும்புவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

திருச்சி அப்போலோ மருத்துவமனை மூத்த பொது மேலாளர் சாமு வேல் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி சிவம், அப்போலோ மருத்துவ மனையின் பிரத்யேக அவசர தொடர்பு எண் 1066 மூலமாக, எந்த அவசர சிகிச்சை தேவைக்கும் பொதுமக்கள் அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

பேட்டியின் போது, பொதுமேலாளர் மணிகண் டன், துணைப் பொது மேலாளர் சங்கீத் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img